என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வன்கொடுமை தடுப்பு சட்டம்"
- சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
- போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பது தெரியவந்தது.
- மின்தடை தொடர்பான பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாக தகவல்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கி செருப்பை நாக்கால் நக்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் ஒரு நபர், மரக்கட்டிலில் அமர்ந்தபடி காலை நீட்ட, அவரது செருப்பை ஒரு வாலிபர் நாக்கால் நக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்த வாலிபர் காதை பிடித்துக்கொண்டு, தான் செய்தது தவறுதான் என கூறி தோப்புக் கரணம் போடுகிறார். இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த நபர், வாலிபரின் கையை முறுக்கி கீழே தள்ளி கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மின்சாரத்துறையின் லைன்மேன் தேஜ்பாலி சிங் என்பதும், பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேஜ்பாலி சிங் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
- ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதியில் கடந்த 15-ந் தேதி தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் (வயது25), தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் (60) ஆகியோரை வெட்டி கொலை செய்தார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா(25) சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மகனையும், தாயையும் கொன்று விட்டு தப்பி ஓடிய தண்டபாணி ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தனிப்படை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தண்டபாணியை கைது செய்தனர். சிகிச்சை பிறகு அவரை நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் நீதிபதி அமர் ஆனந்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதில் தனது மகன் காதல் திருமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் இருந்து ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன். அப்போது என்னை தடுக்க வந்த தாய் கண்ணாம்மாளையும் வெட்டினேன். இதில் எனது தாயும்,மகனும் உயிரிழந்தனர். மருமகள் வெட்டுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு மற்றும் இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் அவரை போலீசார் வேனில் அழைத்து சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நாளை (20-ந் தேதி) சென்னையில் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்தர் விசாரணை நடத்த இருக்கிறார்.
- கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
- போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அழகு பாண்டியராஜா புகார் மனு அனுப்பினார்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அழகு பாண்டியராஜா (வயது 37). இவரது மனைவி மகாதேவி.
இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து 12-வது வார்டு உறுப்பினராக உள்ளார். கடந்த நவம்பர் 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அழகு பாண்டிய ராஜாவை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகுபாண்டியராஜா சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி தூண்டுதலின் பேரில் அவரது சகோதரர் சண்முகநாதன் மற்றும் வலங்கைபுலி, பசும்பொன், முருகன் ஆகியோர் சேர்ந்து தன்னை திட்டியதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அவர் தனது புகார் மனுவை அனுப்பினார்.
அதனை விசாரித்த ஆணையம் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு உத்தர விட்டது. அதன்பேரில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்